நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவர்கள் நுழைவு முறையைக் கொண்டு வருவதாக முடிவெடுத்த மத்திய அரசு நீட் தேர்வு முறையை அறிமுகம் செய்தது. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது எனக்கூறி தமிழ்நாட்டில் அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்க்குரல் எழுப்பினர்.
தமிழ்நாட்டில் நீட் கொண்டு வரவே முடியாது என முழுங்கி வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, நீட் தேர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தது எனக் குற்றச்சாடுகளைச் சுமந்து வந்தது. இந்த சூழலில், இப்போது அதிமுக அமைச்சர் ஒருவர் நீட் வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.